Showing posts with label Chana Dal. Show all posts
Showing posts with label Chana Dal. Show all posts

Wednesday, October 17, 2018

பூம்பருப்பு | கடலை பருப்பு சுண்டல் | Chana Dal Sundal

பூம்பருப்பு / கடலை பருப்பு சுண்டல், சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சுண்டல். சரஸ்வதி/ஆயுத  பூஜை நாட்களில் திருநெல்வேலி பக்கம்  இந்த சுண்டலை செய்வது ரொம்ப பிரசித்தம். இதனை செய்வது சுலபம் மற்றும் சுவையும் அருமையாக இருக்கும். நீங்களும் இந்த சரஸ்வதி/ஆயுத  பூஜைக்கு இந்த பூம்பருப்பை செய்து பாருங்கள்.

பூம்பருப்பு | கடலை பருப்பு சுண்டல் | Chana Dal Sundal

Preparation Time : 2 hrs | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு  - 1/2 கப் 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2 
கறிவேப்பில்லை - ஒரு கொத்து 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 

செய்முறை
முதலில் கடலை பருப்பை  ஒரு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதி வர விடவும் .அதில் கடலைப்பருப்பு சேர்க்கவும்.அடுத்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து கடலை பருப்பை 13-15 நிமிடம் வேகவிடவும்.கடலை பருப்பை எடுத்து விரல்களில் இடையே வைத்து அழுத்தினால் மைய வேண்டும், அந்த பதத்தில் கடலை பருப்பை அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடித்துகொள்ளவும்.அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சூடு பண்ணி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும் ,பின்  கறிவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சிறுது நேரம் வதக்கி கொள்ளவும்.அடுத்து அதில் வேகவைத்த கடலை பருப்பு மற்றும் துருவிய தேங்காய்  சேர்க்கவும்.ஒரு 2 நிமிடம் வதங்கிய பின்  அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.சுவையான கடலை பருப்பு /பூம்பருப்பு சுண்டல் தயார்.
குறிப்புக்கள் 
  • கடலை பருப்பை குக்கரில் கூட வேகவைக்கலாம், ஆனால் கொஞ்சம் கவனமாக பருப்பு குலைந்து விடாமல் வேகவைத்து கொள்ளவும்.
  • தேங்காய் எண்ணெய் சுண்டலுக்கு நல்ல வாசனை மற்றும் சுவை தரும். 

Read more »

Tuesday, June 12, 2018

பருப்பு உருண்டை குழம்பு | Paruppu Urundai Kuzhambu

பருப்பு உருண்டை குழம்பு, ரொம்ப சுவையான ஒரு குழம்பு வகை !!! கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உருண்டைகளை கொண்டு செய்யும் இந்த குழம்பு சாதமுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இது வரை இந்த குழம்பை செய்து பார்த்தது இல்லையென்றால் கண்டிப்பாக செய்து பார்க்கவும், ரொம்ப சூப்பரா இருக்கும். எங்கள் வீட்டில் ஆச்சி காலத்திலிருந்தே குறைந்தது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது மத்தியானம் சாப்பாட்டுக்கு இந்த உருண்டை குழம்பை செய்து விடுவோம், வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு இது !!! 
இந்த குழம்பை ட்ரை  பண்ண நிறைய பேரு உருண்டை குழம்பில் கரைந்து போய்விடுது அப்படி சொல்லி கேட்டிருக்கேன்,அப்படி கரையாமல் இருக்க கீழே சில குறிப்புக்கள் கொடுத்திருக்கேன், முதல் முறை செய்ய போறீங்க/உருண்டை குழம்பில் முன் செய்த போது கரைந்து போய்விட்டது அப்படினா கண்டிப்பாக அந்த குறிப்புகளை எல்லாம் நல்ல கவனத்தில் வைத்துக்கொண்டு செய்யவும் , முதல் தடவையே அட்டகாசமாக இந்த குழம்பை செய்துவிடலாம். வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பருப்பு உருண்டை குழம்பு | Paruppu Urundai Kuzhambu

Preparation Time : 1 hr | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பருப்பு உருண்டைக்கு தேவையான பொருட்கள் 
கடலைப்பருப்பு - 1/3 கப் 
சின்ன வெங்காயம் - 4/ பெரிய வெங்காயம் -1/4
கறிவேப்பில்லை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - 2 டீ ஸ்பூன் 
குழம்புக்கு தேவையான பொருட்கள் 
சின்ன வெங்காயம் - 6/ பெரிய வெங்காயம் -1/2
தக்காளி - 1 
புளி - நெல்லிக்காய்  அளவு 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப 
கொத்தமல்லி இலை - தேவையானளவு 
அரைக்க தேவையான பொருட்கள் 
துருவிய தேங்காய் - 1/4 டேபிள் ஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் கடலைப்பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின் அதனை மிக்ஸில் நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். ஒரு வாணலில் 2 டீ ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பொடியாக நறுக்கிய 1/4 வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள பருப்பு மற்றும் தேவையான உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு 3-4 நிமிடத்தில் பருப்பு நன்கு வதங்கி ஒன்றாக வரும்,அப்பொழுது தீயை அணைத்துவிடவும். பருப்பு கை பொறுக்கும் சூடு வரும் வரை ஆற விடவும்.பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அடுத்து குழம்புக்கு தேவையான வெங்காயம் மற்றும் தக்காளி-யை நறுக்கி கொள்ளவும்.ஒரு வாணலில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சேர்த்து, சூடான பின் கடுகு மற்றும் உளுந்து தாளித்து கொள்ளவும். அடுத்து வெங்காயம்,கறிவேப்பில்லை மற்றும் தக்காளி-யை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு மசிந்த பின்,ஊறவைத்த புளியை கரைத்து புளி தண்ணீரை சேர்க்கவும்.அதனுடன் மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இடைப்பட்ட நேரத்தில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும். புளி தண்ணீர் நன்கு கொதித்த பின் அரைத்த தேங்காயை சேர்த்து மறுபடியும் நன்கு கொதி வர விடவும்.அதில் பருப்பு உருண்டையை மெதுவாக போட்டு 5-7 நிமிடம் வரை குழம்பை கொதிக்க விட்டு அணைத்து விடவும். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கொள்ளவும்.சுவையான உருண்டை குழம்பு தயார்.
குறிப்புக்கள் 
  • பருப்பு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். நன்கு ஆறிவிட்டால் உருண்டை பிடிக்க வராது.
  • பருப்பு உருண்டைகளை குழம்பு நன்கு கொதிக்கும் போது போடவும் அல்லது உருண்டைகள் குழம்பில் கரைந்து விடும்.
  • பருப்பு உருண்டைகளை குழம்பில் போட்ட பின் கொஞ்சம் நேரம் கரண்டி வைத்து குழம்பை கிளற கூடாது. பருப்பு உருண்டை வேகும் முன் அடிக்கடி குழம்பை கிளறினால் உருண்டைகள் உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  • பருப்பு உருண்டைகளை குழம்பில் போடும் முன் நீங்க குழம்பை எப்பொழுதும் வைக்கும்  பதத்தை விட கொஞ்சம் தண்ணியாக வைக்கவும் ஏனென்றால் பருப்பு உருண்டைகளை குழம்பில் போட்ட பின் குழம்பு கொஞ்சம் கெட்டி படும்.

Read more »

Wednesday, May 30, 2018

பசலை கீரை பருப்பு கூட்டு

பசலை கீரை பருப்பு கூட்டு , சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. இது சாதம் மற்றும் சப்பாத்தி-யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். பசலை கீரையில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது இதனை தொடர்ந்து சமையலில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. அதுமட்டுமின்றி இதில் பருப்பு சேர்வதால் நமக்கு தேவையான புரோத சத்தும் கிடைக்கும், அதனால் இந்த மாதிரி கூட்டு வகைகளை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது ரொம்ப நல்லது. வாங்க இப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

Keerai Paruppu Kootu

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பசலை கீரை - 1 கட்டு  (சிறியது )
பாசிப்பருப்பு - 1/4 கப் 
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 1/2
தக்காளி -1
மஞ்சள் தூள்  - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள்  - 3/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
பெருங்காயம் தூள் - 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
நெய் - 1/2 டீஸ்பூன் 
தாளிக்க 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 1 

செய்முறை
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி அதை பிரஷர் குக்கரில் எடுத்து கொள்ளவும் , அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ளவும். அடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் கடலை பருப்பை எடுத்து கொள்ளவும் அதற்கும் தேவையானளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு 3 விசில் வேகவிட்டு எடுத்து கொள்ளவும்.வெங்காயம், தக்காளி மற்றும் கீரை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கொள்ளவும்.அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கிய பின் தக்காளியை போட்டு ஒரு 2 நிமிடம் வதக்கவும்.அடுத்து கீரையை சேர்த்து, அது நன்கு சுருங்கும் வரை வதக்கவும். பின்பு மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பாசிப்பருப்பை கரண்டியால் நன்கு மசித்து கொள்ளவும், பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை  கீரையில் சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிக்கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கீரையில் சேர்த்து கொள்ளவும்.சுவையான பசலை கீரை பருப்பு கூட்டு, பரிமாறும் முன்பு நெய்யை சேர்த்து கொள்ளவும்.
குறிப்புகள் 

  • பாசிபருப்புக்கு பதில் துவரம் பருப்பு கூட இதற்கு பயன்படுத்தலாம்.
  • உங்கள் தேவையான பதத்திற்கேற்ப தண்ணீரை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளவும்.



Read more »