Showing posts with label How to make. Show all posts
Showing posts with label How to make. Show all posts

Thursday, October 25, 2018

பச்சரிசி மாவு | Home made Rice flour

தீபாவளிக்கு செய்யப்படும் நிறைய பலகாரங்களுக்கு பச்சரிசி மாவு தேவைப்படும், அதிலேயும் அதிரசம் போன்ற பலகாரத்துக்கு வீட்டிலே தயாரித்த  பச்சரிசி மாவு தான் நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி முறுக்கு மற்றும் சீடை ஆகியவையும் அதில் செய்தலால் இன்னும் ருசியாக இருக்கும். நிறைய மாவு தேவைப்பட்டால் நீங்கள் மாவு மெஷினில் அரைத்து வாங்கி கொள்ளலாம், அப்படியில்லாமல் கொஞ்சமாக தேவைப்படுது அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் மாவு மெஷின் இல்லயென்றால், இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். வாங்க எப்போ வீட்டிலே பச்சரிசி மாவு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

பச்சரிசி மாவு | Home made Rice flour

Preparation Time : 2 hrs | Cooking Time : 15 minsMakes : 2 & 1/2 cup 
Recipe Category: Basic | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கப் 

செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு 2 முறை கழுவி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.2 மணி நேரத்துக்கு அப்புறம் தண்ணீரை வடித்து அதனை ஒரு துணியில் 30 நிமிடம் உலர்த்தவும். 30 நிமிடத்திற்கு அப்புறம் அரிசி லேசாக ஈரப்பதத்துடன் இருக்கும் அப்போது மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.பொடித்த அரிசி மாவை மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து கொள்ளவும். மீதமாகும் அரிசி குருணையை மீண்டும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் அரிசி மாவை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை கைவிடாமல் வறுத்து கொள்ளவும். அரிசி மாவு நன்கு வறுபட்டபின் மணல் போன்று இருக்கும், அதனை கொண்டு கோலம் கூட போட முடியும். அது தான் பதம், அப்போது மாவை அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறவிடவும், ஆறியபின் அதனை காற்று போகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.சுத்தமாக தயாரிக்கப்பட்ட அரிசி மாவு தயார்.
குறிப்புக்கள் 

  • ஊறவைத்த தண்ணீரை நன்கு வடித்து அரிசியை உலரவிடவும், அப்போதுதான் சீக்கரம் உலரும்.
  • அரிசி மாவை நிறம் மாறாமல் நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.

Read more »

Friday, May 18, 2018

உதிரி உதிரியாக பாசுமதி அரிசியை சமைப்பது எப்படி??

இப்போ தான் சமையல் செய்து பழகுறீங்கனா,பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக சமைப்பது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். சரியாக வேகவில்லை அல்லது குலைந்து போய்விட்டது என்றாலும் சாப்பிட நல்லாயிருக்காது. பல முறை குக்கர் மற்றும் திறந்த பானையில் பாசுமதி அரிசியை சமைத்து பார்த்ததில், திறந்த பானையில் தான் ரொம்ப சூப்பரா உதிரி உதிரியாக  வந்தது, அதனால் நான் எப்பொழுது எல்லாம் பாசுமதி அரிசியை மட்டும் திறந்த பானையில் தான் வடிப்பது. உங்களுக்கும் பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக சமைப்பது சவாலாக இருந்தால் இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்கள்.

How to cook Basmati Rice

Preparation Time : 30 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Roce | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப் 
தண்ணீர் - 2 கப் 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை
பாசுமதி அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிவர விடவும். அதில் உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்க்கவும்.பின்பு ஊறவைத்த அரிசியில் தண்ணீரை வடித்து அரிசியை மட்டும் கொதிக்கும் தண்ணீரில் போடவும்.அரிசி கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை மெலிதாக வைத்து ஒரு மூடியால் பாத்திரத்தை மூடவும்.7-9 நிமிடத்தில் அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றியிருக்கும். அப்போது தீயை அணைத்து விடவும்,ஆனால் மூடியை திறக்காமல் ஒரு 10 நிமிடம் அப்படியே விடவும். 10 நிமிடம் ஆன பின் லேசாக ஒரு போர்க்-யை கொண்டு கிளறி விடவும்.சூப்பரா உதிரி உதிரியாக பாசுமதி அரிசியில் செய்த சாதம் தயார்.
குறிப்புக்கள் 

  • நல்லெண்ணெய் சேர்ப்பதால் சாதம் ஒட்டாமல் வரும்.
  • அடிக்கடி கிளறினால் அரிசி உடைந்து சாதம் சீக்கரம் குலைந்து விடும்.
  • உப்பு சேர்க்காமலும் சாதம் வேகவைத்து கொள்ளலாம்.
  • தண்ணீர் முழுவதும் வற்றிவிட்டதா என்று பார்த்துவிட்டு தீயை அணைக்கவும்.

Read more »

Monday, May 14, 2018

கூழ் வத்தல் | அரிசி வத்தல்

கூழ் வத்தல், அரிசியில் செய்யப்படும் இந்த வத்தல் ரொம்ப சுவையாக இருக்கும் . வெயில்காலத்தில் செய்து வைத்துக்கொண்டால் வருடம் முழுதும் பயன்படுத்தி கொள்ளலாம். கலவை சாதம் முதல் மீல்ஸ் சாப்பாடு வரை எதனுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். நன்கு வெயிலடிக்கும் நாட்களில் இந்த வத்தலை செய்யுங்கள், இரண்டே நாட்களில் காய வைத்து எடுத்துவிடலாம். இது கடைகளில் கிடைக்கும் வத்தலை விட மிக ருசியானது. மேலும் கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான வத்தலில் தேவைக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டு இருக்கும், அது அடிக்கடி உண்பது  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல ,வீட்டிலே வத்தல் செய்வதால் நாம் தேவைக்கேற்ப உப்பு மற்றும் காரம் சேர்த்து கொள்ளலாம். வாங்க இப்போ எப்படி  கூழ் வத்தல் செய்வதுனு பார்க்கலாம் .

  

Koozh Vathal / அரிசி வத்தல்

Preparation Time : 2 days | Cooking Time : 25 minsMakes : 4 Cups 
Recipe Category: Preserve | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 1 கப் 
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - 1 கப்(ஊறவைக்க ) + 4 கப் 
உப்பு - தேவைக்கேற்ப 


செய்முறை
முதல்நாள் இரவே அரிசியை நன்கு கழுவி ஒரு கப் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை மிக்ஸில் அரிசி, பச்சை மிளகாய் மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து, தேவைக்கேற்ப ஊறவைத்த தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும் .ஊறவைத்த தண்ணீர் மீதம் இருந்தால் அதையும் அரைத்த மாவுடன் ஊற்றி ஒரு பெரிய பாத்திரத்துக்கு மாற்றவும். அதில் 4 கப் தண்ணீரை சேர்த்து அடுப்பில் மெல்லிய தீயில் வைக்கவும் .தேவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.கைவிடாமல் கலந்துவிட்டு கொண்டே இருக்கவும் . 20- 25 நிமிடத்தில்  மாவு நன்கு கூழ் போல பளபளவென்று வரும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும். வத்தல் ஊற்றுவதற்கு வசதியாக கூழை சிறு சிறு பாத்திரத்துக்கு மாற்றி கொள்ளவும். நன்கு வெயிலடிக்கும் இடத்தில் ஒரு சுத்தமான வெள்ளை நிற காட்டன் துணியை விரித்துக்கொள்ளவும் .ஒரு ஸ்பூன் கொண்டு கூழை எடுத்து வரிசையாக ஊற்றவும் .இதனை ஒரு நாள் முழுதும் அப்படியே காய விடவும்.சாயந்தரம் நேரம் ஒரு பக்கம் வத்தல் நன்கு காய்ந்திருக்கும் , ஒவ்வொரு வத்தலாக துணியில் இருந்து பிரித்து எடுக்கவும். எடுப்பதற்கு வரவில்லையென்றால் சிறுது தண்ணீர் தெளித்து கொள்ளவும். அணைத்து வத்தலையும் ஒரு பெரிய தட்டில் பரப்பி இரவில் உலர விடவும்.மறுநாள் காலை மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.  நன்கு வெயிலடித்தால் இரண்டு நாளில் காய்ந்து விடும். தேவைப்பட்டால் கூட ஒரு நாள் காய வைத்து கொள்ளவும்.வத்தல் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் காய வைத்துக்கொள்ளவும். தேவைக்கேற்ப பொரித்து எடுத்துக்கொள்ளவும் .சுவையான வீட்டிலே செய்த கூழ் வத்தல் தயார்.
குறிப்புக்கள் 
  • கொடுத்துள்ள அளவிற்கு 1/2 டீஸ்பூன் முதல் 3/4  டீஸ்பூன் வரை உப்பு போதுமானதாக இருக்கும் . கூழை சுவைத்துப்பார்த்தால் அவ்வளவாக உப்பு தெரியாது அதற்காக மேற்கொண்டு உப்பு போட வேண்டாம். வத்தல் காய்ந்த பின் சரியாக இருக்கும்.
  • ஒரு இரவு முழுவதும் அரிசியை ஊறவைப்பதால் லேசாக ஒரு புளிப்பு சுவை வரும். அது வத்தலுக்கு மேலும் சுவையை கொடுக்கும்.
  • அரிசியை பொறுத்து தண்ணீரின் தேவை சில நேரம் கூடும், அதனால் ஒரு 2 கப்  சூடு தண்ணீரை  தயாராக வைத்து கொள்ளவும். கூழ் ரொம்ப கெட்டியானால் சூடு தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.
  • காலையில் வெயில் வரும் சமயம் வத்தல் ஊற்றுங்கள், ரொம்ப சுலபமாக இருக்கும்.
Read more »

Friday, May 11, 2018

சாம்பார் பொடி| சாம்பார் தூள்

சாம்பார் பொடி/தூள் , சாம்பாருக்கு மட்டுமல்ல மற்ற குழம்புக்கும்,பொரியலுக்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டில் செய்யும் சாம்பார் பொடியும் ஒவ்வொரு சுவையில் மற்றும் மணத்தில் இருக்கும். கடையில் கிடைக்கும் பொடியை விட நாம் வீட்டில் செய்யும் பொடிக்கு மணமும் , சுவையும் தனி தான். ரொம்ப நாட்கள் வாசம் போகாமலும்  இருக்கும். இந்த சாம்பார் பொடி ரெசிபியை டிவியில் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சில் பார்த்தேன், வீட்டில் செய்வதை விட கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் உடனே செய்து பார்த்தேன் , ரொம்ப நன்றா இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள் !!!

Sambar Powder|சாம்பார் தூள்

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsMakes : 1 cup 
Recipe Category: Spice Powder | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை -  3 டேபிள்ஸ்பூன் 
துவரம் பருப்பு - 1 & 1/4 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு  - 1/2 டேபிள்ஸ்பூன்
முழு உளுந்து  - 1/2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்  - 1/4 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
கறிவேப்பில்லை - 1 கொத்து 
மஞ்சள் போடி - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயம் - 3/4 டீஸ்பூன்


செய்முறை
அனைத்து பொருட்களையும் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளவும் . ஒரு கடாயை காயவைத்து அதில் முதலில் கொத்தமல்லி விதை போட்டு நன்கு வாசம் வரும்வரை வறுக்கவும்.வறுத்த கொத்தமல்லியை ஒரு தட்டுக்கு மாற்றவும், பின்பு அதே கடாயில் துவரம் பருப்பு,கடலை பருப்பு  மற்றும் முழு உளுந்து போட்டு நன்கு பொன்னிறமகா வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அடுத்து மிளகு,சீரகம் , கடுகு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை நன்கு வாசம் வரும்வரை வறுத்து எடுத்துவைத்து கொள்ளவும்.கறிவேப்பில்லையையும் நன்கு மொறு மொறுவென்று ஆகும் வரை வறுத்துக்கொள்ளவும். கடைசியாக மிளகாயையும் மொறு மொறுவென்று  வறுத்துக்கொள்ளவும்.வறுத்த அனைத்தையும் சிறுது நேரம் ஆற விடவும்.கொஞ்சம் ஆரியபின் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை போடவும்.அதனுடன் மஞ்சள் பொடி மற்றும் பெருங்காய பொடியை சேர்த்து கொள்ளவும்.நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்,பின்பு அரைத்த பொடியை பேப்பரில்/பெரிய தட்டில்  பரப்பி நன்கு ஆறவிடவும். மசாலா டப்பாவில் போட்டுவைத்து தேவைக்கு பயன்படுத்தி கொள்ளவும்.சுவையான  மற்றும் மணமான சாம்பார் பொடி தயார்.
குறிப்புக்கள் 
எல்லாம் பொருட்களையும் மெல்லிய தீயில் வறுக்கவும்.
சாம்பார் பொடி கொரகொரவன்று இருந்தால் ஒரு முறை சலித்து, மிதமுள்ளவற்றை மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ளவும்.


Read more »