Showing posts with label டிபன். Show all posts
Showing posts with label டிபன். Show all posts

Thursday, January 31, 2019

காஞ்சிபுரம் இட்லி | Kancheepuram Idli | Idly recipe

காஞ்சிபுரம் இட்லி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரசாதமாக தரப்படும் ஒரு சுவையான இட்லி வகை. கோயிலில் இதற்காக தனியாக இட்லி மாவு தயார் பண்ணுவாங்க , ஆனால் இன்னைக்கு ஷேர் பண்ற இந்த ரெசிபில் நாம் வீட்டில் பயன்படுத்தும் இட்லி மாவை கொண்டே சூப்பரா இந்த இட்லியை நொடியில் செய்து விடலாம். வாங்க இப்போ இந்த பாரம்பரியமான காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

காஞ்சிபுரம் இட்லி | Kancheepuram Idli | Idly recipe

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes : 2 to 3 
Recipe Category: Breakfast/Dinner | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - 2 கப் 
மிளகு (கொர கொரவென்று  பொடித்தது) - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/8 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - ஒரு கொத்து 


செய்முறை
முதலில் இட்லி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும், அடுத்து ஒரு வாணலியில் நெய்யை சூடு பண்ணி அதில் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வாசம் வரும் படி தாளித்து கொள்ளவும்.தாளித்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் இட்லி வேக வைக்க சிறு சிறு டம்ளர்-யை எடுத்து கொள்ளவும்.அடுத்து வாழை இலையை சிறு சிறு பட்டையாக வெட்டி எடுத்து கொள்ளவும்.அதனை டம்ளரின் உட்புறத்தை சுற்றி வைக்கவும்.டம்ளரில் முக்கால் பக்கம் இட்லி மாவை ஊற்றவும், அதனை ஒரு வேகவைக்கும் பாத்திரத்தில் அடுக்கி கொள்ளவும்.மிதமான தீயில் 12-15 நிமிடம் அல்லது இட்லி நன்கு வேகும் வரை வேகவைத்து எடுக்கவும்.சிறுது நேரம் ஆறவிட்டு பின் டம்ளரை தலைகீழ் கவிழ்த்தால் இட்லி அழகாக வெளியே வந்துவிடும், பின் வாழை இலையை எடுத்துவிட்டு பரிமாறவும்.உங்களுக்கு விருப்பபட்டால் சிறு சிறு வட்டமாக இட்லியை வெட்டியும் பரிமாறலாம். சாம்பார் மற்றும் சட்னி இரண்டுமே அட்டகாசமாக இருக்கும்.
குறிப்புக்கள்:
  • டம்ளருக்கு பதில் இட்லி தட்டில் கூட இந்த இட்லியை அவிக்கலாம்.
  • நெய் இந்த இட்லிக்கு நல்ல மணத்தையும் சுவையையும் தரும்.

Read more »

Monday, July 9, 2018

டிபன் சாம்பார் | இட்லி சாம்பார் | Tiffin Sambar

டிபன் சாம்பார், பாசி/சிறு பருப்பு கொண்டு செய்யும் இந்த சாம்பார் இட்லி மற்றும் தோசை போன்ற டிபன் ஐட்டங்களுடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். டிபன் சாம்பாருக்கு நாம் சாப்பாடுக்கு சேர்ப்பது போல் புளி எல்லாம் சேர்க்க தேவையில்லை, தக்காளி மட்டும் பயன்படுத்தினால் போதும் ஏனென்றால்  இட்லி மற்றும் தோசை வகைகளில் ஏற்கனவே லேசாக புளிப்பு இருப்பதால் சாம்பாரில் நாம் அதிகம் புளிப்பு சேர்க்க தேவையில்லை. ஆனால் நீங்கள் விருப்பினால் புளி சேர்த்து கொள்ளலாம். வாங்க சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய எந்த டிபன் சாம்பார் எப்படினு பார்க்கலாம்.

டிபன் சாம்பார் | இட்லி சாம்பார் | Tiffin Sambar

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Sambar | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பாசி/சிறு  பருப்பு - 1/4 கப் 
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
காய்கறிகள் - 1/4 கப் (உருளை,கேரட் ,பீன்ஸ்)
சின்ன வெங்காயம் - 5
தக்காளி -1
பச்சை மிளகாய் -1
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
கொத்தமல்லி இலை - சிறுதளவு 
தாளிக்க 
எண்ணெய் -1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறுதளவு  

செய்முறை
முதலில் குக்கரில் கழுவிய பருப்பு, காய்கறிகள், வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளவும்,அடுத்து அதில் பெருங்காயம் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு 3 விசில் வேகவைத்து கொள்ளவும்.அதில் மஞ்சள்,மிளகாய்,சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து பருப்புடன் நன்கு மசித்து கொள்ளவும், தேவையான தண்ணீர் சேர்த்து அதை கொதிக்க விடவும்.நன்கு கொதித்து மசாலா வாசம் போனபின், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். கடைசியான கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
சுவையான டிபன் சாம்பார் தயார்.
குறிப்புக்கள்: 

  • டிபன் சாம்பார் என்பதால் குறைய காய்கறிகள் சேர்த்தால் போதும்.
  • துவரம் பருப்பு சேர்க்காமல் வெறும் பாசி பருப்பை கொண்டு செய்தாலும் நன்றாக இருக்கும்.

Read more »