Pages

Search This Blog

Wednesday, December 26, 2018

நெல்லிக்காய் துவையல் | Gooseberry Thuvaiyal

நெல்லிக்காய் துவையல், சுவையான மற்றும் சத்தான ஒரு சூப்பர் துவையல். பெரிய நெல்லிக்காயில் நிறைய சத்துகள் உள்ளன,தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது அப்படினு வீட்டில் பெரியவங்க சொல்லுவாங்க,ஆனா நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது கொஞ்சம் துவர்ப்பாக இருக்கும், அதற்கு பதில் இப்படி துவையலாக செய்து சாப்பிடு பாருங்கள், சுவையை அட்டகாசமாக இருக்கும். வாங்க இப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

நெல்லிக்காய் துவையல் | Gooseberry Thuvaiyal

Preparation Time : 5 mins | Cooking Time : 20 minsServes : 5 to 6 
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் - 6
காய்ந்த மிளகாய் - 10 to 12
உளுந்த பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு - 2 பல் 
புளி -  1/2 நெல்லிக்காய் அளவு 
கறிவேப்பில்லை - 2 கொத்து 
நல்லெண்ணெய் - 1+ 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 

செய்முறை
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து உடவே 1/2 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.அதனை 1 விசில் வேகவைத்து எடுத்து கொள்ளவும் ,ஆறிய  பின் நான்காக வெட்டி கொட்டையை எடுத்து விடவும். பின் ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து முதலில் உளுந்த பருப்பை சேர்க்கவும்.பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை,புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.அடுத்து அதில் தேங்காய் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு 2 நிமிடம்  வறுத்து கொள்ளவும். அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும்.மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடித்து கொள்ளவும் பின் அதில் நெல்லிக்காயை சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.பின் ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் அரைத்த துவையல் சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுத்துக்கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான நெல்லிக்காய் துவையல் தயார்.
குறிப்புக்கள் 
  • நெல்லிக்காயின் புளிப்பிற்கு ஏற்ப புளியை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளவும்.
  • நல்லெண்ணெய் இந்த துவையலுக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.

Monday, December 10, 2018

ரவை | ரவா இட்லி | Rava Idli

ரவை/ரவா இட்லி, சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் சாப்ட் இட்லி. மாவு அரைக்கணும்,புளிக்க வைக்கணும் அப்படி எதுவும் இதற்கு தேவையில்லை உடனடியாக செய்யக்கூடிய ஒரு இட்லி வகை. கடையில் கிடைக்கும்  ரவை இட்லி mix பாக்கெட் கொண்டு செய்யும் ரவா இட்லியை விட வீட்டிலே செய்யும் இந்த ரவா இட்லி ரொம்ப நன்றாக இருக்கும். உங்களுக்கு ரவை இட்லி பிடிக்குமென்றால் எத்தனை செய்து பாருங்கள்.

ரவை|ரவா இட்லி

Preparation Time : 30 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப் 
தயிர் - 1/2 கப் 
தண்ணீர் - 1/2 + 1/2 கப் 
Eno சால்ட் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை பழச்சாறு - 1 டீஸ்பூன்  
எண்ணெய் - இட்லி தட்டில் தடவுவதற்கு தேவையானளவு 
துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன் (விருப்பபட்டால் )
தாளிக்க 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
முந்திரி பருப்பு - 1 டீஸ்பூன் 
கடலை பருப்பு - 1 டீஸ்பூன் 
கடுகு மற்றும் உளுந்த பருப்பு  - 1/2 டீஸ்பூன் 
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது ) - 1 டீஸ்பூன்(விருப்பபட்டால் ) 
கறிவேப்பில்லை - 1 கொத்து


செய்முறை
முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பொன்னிறமாக வருது கொள்ளவும், பின் அதில் ரவையை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும். 
ரவை நிறம் மாறாத படி வறுத்து எடுத்து கொள்ளவும், சிறுது நேரம் இந்த கலவையை ஆற விடவும்.
பின் அதில் 1/2 கப் தண்ணீர், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை  ஒரு 20-30 நிமிடம் ஊற விடவும்.
பின் அதில் மீதி 1/2 தண்ணீர்,eno சால்ட் ,எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி விருப்பபட்டால் அதில் துருவிய கேரட் சேர்த்து பின் ரவை கலவையை குழியில் முக்காவாசி அளவு ஊற்றவும்.
இட்லி சட்டியில் ஒரு 12-15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.சிறுது நேரம் ஆறிய பின் இட்லியை ஒரு ஸ்பூனால் எடுக்கவும்.
சுவையான ரவை இட்லி தயார். சாம்பார் மற்றும் சட்னி-யுடன் பரிமாறவும்.
குறிப்புக்கள்:
  • மினி இட்லி தட்டு அல்லது சதா இட்லி தட்டு எப்படி எது வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.
  • இட்லியை சிறுது நேரம் ஆற விட்டு தட்டிலிருந்து எடுக்கவும் அப்போதுதான் ஒட்டாமல் வரும்.


Tuesday, December 4, 2018

பருப்பு பொடி | Dal Powder

பருப்பு பொடி, சுவையான இந்த பருப்பு பொடி சாதத்தில் போட்டு சாப்பிட நன்றாக இருக்கும். ஆந்திரா உணவகங்களில்  பருப்பு பொடி மற்றும் நெய் கண்டிப்பாக இருக்கும், அப்படி சாப்பிட்டு தான் இந்த  பருப்பு பொடி எனக்கு அறிமுகம் ஆனது. பருப்பு பொடிகள் செய்முறை ஒவ்வொரு இடத்துக்கு ஏற்ப மாறுபடும்,சில இடங்களில் வெறும் துவரம் பருப்பை மட்டும் பயன்படுத்தி செய்வார்கள்,ஆனால் இன்று நான் ஷேர் பண்ணும் ரெசிபியில் மூன்று வகையான பருப்புகளை பயன்படுத்தியுள்ளேன்,சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.உங்களுக்கும் உணவகங்களில் தரும்  பருப்பு பொடி பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள்,ரொம்ப நன்றாக இருக்கும்.

பருப்பு பொடி | Dal Powder

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/4 கப் 
முழு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன் 
பாசி பருப்பு  - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 


செய்முறை
தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து கொள்ளவும்.முதலில் துவரம் பருப்பை நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும்.அதனை ஒரு தட்டில் கொட்டிவிட்டு, அடுத்து அதை போல் பாசி பருப்பை சிவக்க வறுத்து,துவரம் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.அடுத்து உளுந்த பருப்பையும் நன்கு சிவக்க வறுத்து மற்ற பருப்புடன் சேர்த்து கொள்ளவும். பின் காய்ந்த மிளகாயை நன்கு மொறுமொறுவென்று வறுத்து கொள்ளவும்.அதனையும் பருப்புடன் சேர்த்து கொள்ளவும், கடைசியாக மிளகு-யை லேசாக வறுத்து சேர்த்து கொள்ளவும். கூடவே பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் சிறுது நேரம் ஆற விடவும் .பின் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து  நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.சுவையான பருப்பு பொடி தயார்.காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு தேவையான போது பயன்படுத்தலாம். சூடான சாதத்துடன் பருப்புப் பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்புக்கள்
  • ஒவ்வொரு பருப்பையும் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.
  • நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.

Thursday, November 22, 2018

பொரி உருண்டை | Pori Urundai

பொரி உருண்டை, சுலபமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். பெரும்பாலும் இதனை கார்த்திகை தீபம் பண்டிகைக்கு செய்வார்கள், நாளை  கார்த்திகை தீபம்  சுலபமாக செய்யக்கூடிய இந்த பொரி உருண்டையை நீங்களும் செய்து பாருங்கள். இதனை செய்வது ரொம்ப சுலபம், வெல்ல பாகு செய்வது தான் வேலை, மற்றபடி சற்றென்று செய்துவிடலாம்,வாங்க இப்போ பொரி உருண்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பொரி உருண்டை | Pori Urundai

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsMakes : 10 
Recipe Category: Snack | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பொரி - 2 கப் 
வெல்லம் - 1/2 கப் 
சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன் 
தண்ணீர்  - தேவையானளவு 
நெய் - சிறுதளவு 


செய்முறை
முதலில் வெல்லத்தை சிறிதாக பொடித்து ஒரு வாணலில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் கரைந்த பின் ஒரு முறை வடிகட்டி மீண்டும் அதனை கொதிக்க விடவும்.கூடவே சிறுது சுக்கு பொடி சேர்த்துக்கொள்ளவும் வெல்லம் உருட்டும் பதம்(சிறுதளவு வெல்ல பாகை எடுத்து தண்ணீரில் ஊற்றவும், பாகு கரையாமல் கையில் எடுத்து உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும் ) வந்த பின் அடுப்பை அனைத்து உடனே பொரியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கையில் லேசாக நெய் தடவி பொரியை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.சுவையான பொரி உருண்டை தயார்.குறிப்புக்கள் 
  • சுக்கு பொடிக்கு பதில் ஏலக்காய் பொடி கூட சேர்க்கலாம்.
  • பொரி லேசாக சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்து விடவும், ஆறியபின் உருண்டை பிடிக்க முடியாது.



Tuesday, November 20, 2018

ஓட்ஸ் உப்புமா | Oats Upma

ஓட்ஸ் உப்புமா, சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் சிற்றுண்டி. முதலில் எனக்கு அவ்வளவாக இந்த ஓட்ஸ் உப்புமா பிடிக்காது, எப்போது செய்தாலும்  கொஞ்சம் குழைந்து போய்விடும்,எனக்கு உப்புமாவே கொஞ்சம் உதிரியாக இருந்தால் தான் பிடிக்கும். அப்புறம் உதிரியாக செய்றது எப்படினு தெரிந்தபின் இப்போ இதனை அடிக்கடி செய்றேன், ரொம்ப சுவையாகவும் இருக்கு. வாங்க இந்த சத்தான ஓட்ஸ் உப்புமா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

ஓட்ஸ் உப்புமா | Oats Upma

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப் 
வெங்காயம் - 1/2
தண்ணீர் - 1/2 கப் 
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் 
சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை
முதலில் வெங்காயத்தை  பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் காய வைத்து கடுகு உளுந்து தாளித்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் ஓட்ஸ்  சேர்த்து கொள்ளவும்.பின் மஞ்சள்,மிளகாய் சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து 1/2 கப் தண்ணீரை ஓட்ஸ் முழுவதும் படும்படி சிறுசிறுதாக ஊற்றி கலந்து கொள்ளவும்.அடுப்பில் தீயை சிறிதாக வைத்து ஒரு மூடி போட்டு நன்கு ஓட்ஸ்-யை வேகவிடவும். அடிபிடிக்காமலிருக்க அடிக்கடி கிளறி கொள்ளவும். சுவையான மற்றும் சத்தான ஓட்ஸ் தயார். பரிமாறும் போது சிறுது கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவும்.
குறிப்புக்கள்

  • ஓட்ஸ் உப்புமா நன்கு குழைய வேண்டுமென்றால் மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • 1/2 கப் தண்ணீரை நன்கு அனைத்து ஓட்ஸிலும் படும்படி சேர்த்து கொள்ளவும், அப்போது தான் ஓட்ஸ் நன்கு வெந்து மிருதுவாக இருக்கும்.

Friday, November 16, 2018

கல்யாண ரசம் | மைசூர் ரசம் | Kalyana Rasam

கல்யாண ரசம்/மைசூர் ரசம், ரொம்ப சுவையான ஒரு ரசம் வகை. கல்யாண வீடுகளில் செய்யப்படும் இந்த ரசத்தின் சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.உங்களுக்கு கல்யாண வீட்டு ரசம் பிடிக்குமென்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள். சாதத்துடன் இந்த ரசம் மற்றும் ஒரு அப்பளம் இருந்தால் கூட போதும் அட்டகாசமான சாப்பாடு தயார்.வாங்க எப்போ இந்த கல்யாண ரசம் எப்படி செய்வதுனு பார்க்கலாம். 

கல்யாண ரசம் | மைசூர் ரசம்| Kalyana Rasam

Preparation Time : 30 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Rasam | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி - 1 
புளி - ஒரு எலுமிச்சை அளவு 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
பெருங்காயத்தூள் - 1/8 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி - சிறுதளவு 
வறுத்து பொடி செய்து கொள்ள தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 1 & 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 


செய்முறை
முதலில் புளியை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும், பின் வறுத்து கொள்ள வேண்டிய பொருட்களை நன்கு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.அதனை சிறுது நேரம் ஆற விட்டு நன்கு நைசாக பொடித்து கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்,அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடு பண்ணி அதில் கடுகு மற்றும் கறிவேப்பில்லை தாளித்து கொள்ளவும் ,பின் பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை அதில் சேர்க்கவும் ஒரு நிமிடம் வதக்கவும்.அடுத்து ஊற வைத்த புளியிலிருந்து புளி கரைசல் எடுத்து அதில் சேர்க்கவும்,பின் வேகவைத்த பருப்பு மற்றும் பொடித்த பொடியை சேர்க்கவும்.அடுத்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.ஒரு 5-8 நிமிடம் கொதித்த பின்,அதில் கொத்தமல்லி தழை  சேர்த்து இறக்கவும்.சுவையான மற்றும் மணமான ரசம் தயார்.
குறிப்புக்கள் 
  • கரம் அதிகமாக வேண்டுமென்றால் தாளிக்கும் போது  2 காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
  • நெய்  இந்த ரசத்துக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.